போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி நோயினால் வெளியேறியவர் சமந்தா. அதனால் நல்ல வாய்ப்புகளை இழந்த அவரால் இனிமேல் தமிழில் பெரிய இடத்தை பிடிக்க முடியாது என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில்தான் அஞ்சானில் சூர்யா, கத்தியில் விஜய்யுடன் கமிட்டாகி முன்வரிசை நடிகைகளுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தார் சமந்தா.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சூர்யாவுடன் 24 படத்தில் நடித்து வரும் சமந்தா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2விலும் நடித்து வருகிறார். இதற்கடுத்து மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் வடசென்னையிலும் தனுசுடன் நடிக்கும் அவர், கத்திக்கு பிறகு மறுபடியும் அட்லி இயக்கும் படம் மூலம் விஜய்யுடன் இணைகிறார்.
ஆக, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என கோலிவுட்டின் மெகா ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் நாயகியாகி விட்டார் சமந்தா.