‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்-தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தற்போது விக்ரமுடன் ''10 எண்றதுக்குள்ள'', தனுஷூடன் ''விஐபி-2'' படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தான் பயந்த சுபாவம் என்றும், சினிமாவுக்கு வந்த பின்னர் அந்த பயம் போய்விட்டதாகவும் சமந்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து சமந்தா மேலும் கூறியிருப்பதாவது, சின்ன வயது முதலே நான் கூச்சம் சுபாவம் உடையவள். நான்கைந்து பேர் கூடி நின்றாலே அங்கு போக பயப்படுவேன். பள்ளியில் ஆசிரியர் நடன ஆட சொன்னபோது கேலி செய்வார்களோ என்று பயப்படுவேன். ஆனால் அந்த பயம் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. சினிமாவுக்கு வந்த பின்னர் என்னுள் இருந்த பயம், கூச்சம் எல்லாம் போய் ஒருவித தைரியம் வந்துள்ளது. இப்போது நான் நன்றாக நடனம் ஆடுகிறேன். அதற்கு காரணம் ஹீரோக்கள் தான். அவர்களை பார்த்து தான் நான் நடனம் கற்று கொண்டேன் என்று கூறியுள்ளார்.