போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாண்டியநாடு படத்தை அடுத்து விஷாலை நாயகனாக வைத்து சுசீந்திரன் இயக்கி வரும் படம் பாயும்புலி. முந்தைய படத்தைப்போலவே இந்த படமும் மதுரை கதைக்களத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதோடு, முந்தைய படத்தில் விஷாலுடன் நடித்த சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். மற்றபடி, காஜல்அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
முந்தைய படங்களில் முற்றிலும் மதுரை மண்வாசணை கதைகளில் அந்த மக்களின் வாழ்வியலை சொன்ன சுசீந்திரன், இந்த படத்தில் அங்குள்ள ரவுடிகளை களையெடுக்கும் கதையை கையிலெடுத்திருக்கிறார். ஏற்கனவே மதுரை ரவுடியைப்பற்றிய கதையை ஜிகர்தண்டா என்ற பெயரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.
ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்ட அதிரடியான கதையில் உருவாகிறது. விஷால் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரை நகர்ப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,சமீபத்தில் ஒருநாள் மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாயும்புலி யூனிட்டுடன் சென்று விஷாலும், சுசீந்திரனும் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது அவர்களுடன் சுசீந்திரன், சூரி ஆகியோர் தங்களது மகன்களையும் அழைத்து சென்றிருந்தார்களாம்.