போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
நிழல்கள் படத்திற்காக இளையராஜாவின் இசையில் பொன்மாலைப்பொழுது என்ற பாடல் மூலம் பாடலாசிரியர் ஆனவர் வைரமுத்து. அதைத்தொடர்ந்து இளையராஜா கூட்டணியில் ஏராளமான படங்களுக்கு பாடல் எழுதி வந்தவர், ஒரு கட்டத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து பாடல்கள் எழுதத் தொடங்கினார்.
பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ரோஜா படத்தில் இருந்து இப்போதுவரை அவர் இசையமைக்கும் படங்களில் கண்டிப்பாக தானும் இடம் பிடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக ரகுமான் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் புதிதாக அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் பாடல் எழுத அழைத்தால்கூட மறுப்பதில்லை வைரமுத்து.
ஆனால், அப்படி தன்னை புதியவர்கள் எழுத அழைத்தால் ஒரு கண்டிசன் போடுகிறார் அவர். அதாவது படத்தின் மொத்த பாடல்களை நானே எழுதுவேன் என்பதுதான் அது. அந்த கண்டிசனுக்கு உடன்பட்டால் மட்டுமே பாடல் எழுதிக்கொடுக்கிறார். அதேசமயம், புதியவர்களின் இசையில் பாடல் எழுத இப்படி கண்டிசன் போடும் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுத அப்படி கண்டிசன் போடுவதில்லை. அவர்களின் படங்களில் இரண்டொரு பாடல்கள் எழுத வாய்ப்பளித்தாலும் மறுக்காமல் எழுதிக்கொடுக்கிறார்.