போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜயகாந்த்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். ஒருக்கட்டத்தில் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நீண்ட இடைவௌிக்கு பிறகு தற்போது பாடகர் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ''புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'' என்ற படத்தை தயாரிக்கிறார். புதியவர் சைய்யது இப்ராஹிம் இயக்க, கிரிஷ் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
உடல் நலக்குறைவோடு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று இப்ராஹிம் ராவுத்தர் பேசியதாவது.... எனக்கு 63 வயதாகிவிட்டது. 40 வருடம் இந்த சினிமா துறையில் இருக்கிறேன். இதுவரை 32 படங்களை தயாரித்துள்ளேன். நிறைய புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியன்களை அறிமுகம் செய்துள்ளேன். இந்த 40 வருட சினிமா வாழ்வில் இதுவரை தவறாக, ஆபாசமான படங்களை நான் எடுத்தது கிடையாது. சினிமாவுக்கு ஜாதி, இனம், மொழி, மதம் என்று எதுவும் கிடையாது, இதில் நான் உறுதியாக இருப்பவன். முழுக்க முழுக்க கதையை நம்பிதான் படங்கள் எடுப்பேன். இந்தப்படத்தின் கதையும் அப்படித்தான்.
கோ படத்தில் ஒரு பாட்டில் வந்து போன கிரிஷை பார்த்துவிட்டு தான் அவரை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இயக்குநரிடம் நானே போய் பேச சொன்னேன். இப்போது எனக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. என்னுடைய படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.