போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாடகர் கிரிஷ், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்கும் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் தம்பி சைய்யது இப்ராஹிம் இயக்குகிறார். சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரெஹைய்னா இசை அமைக்கிறார், செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அதில் கிரிஷ் பேசியதாவது: சினிமாவில் நடிக்கும் ஆசையில்தான் அமெரிக்காவில் நடிப்பு கோர்ஸ் படிச்சேன். ஆனால் சூழ்நிலை பாடகனாக்கி விட்டது. பாடகனாகவே 9 வருடம் கடந்து விட்டேன். ஆனாலும் நடிப்பு முயற்சி என்னை நடிகனாக்கி விட்டது. கோ படத்தில் ஒரு பாட்டில் சின்ன ஷாட்டில் வருவேன். அந்த ஷாட்தான் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது. இப்ராஹிம் ராவுத்தர் அய்யா என் தந்தையை விட என் மீது அக்கறை கொண்டிருந்தார்.