‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் எதையுமே பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அவரது எண்ணங்கள் எத்தனை விசாலமானது என்பதற்கு உதாரணம்தான் சென்னை தி.நகரில் உள்ள பிரஷாந்த் கோல்ட் டவர் கட்டிடம். பிரஷாந்த் தற்போது நடித்து வரும் சாஹசம் படமும் கூட தியாகராஜனின் பிரம்மாண்டமான எண்ணத்தின் வெளிப்பாடாகவே வளர்ந்து வருகிறது. பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரிக்கு பல லட்சங்களை கொட்டிக் கொடுத்து ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்து வந்தார்.
லண்டனைச் சேர்ந்த புதுமுக நடிகையை பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார். தமன் இசையில் சங்கர் மகாதேவன், சிம்பு, அனிருத், லட்சுமிமேனன் என பல பிரபலங்களை பாட வைத்திருக்கிறார். இவ்வளவும் செய்துவிட்டு சாஹசம் படத்தின் இசைவெளியீட்டை சாதாரணமாக நடத்துவதில் தியாகராஜனுக்கு உடன்பாடில்லை. எனவே மலேசியாவில் சாஹசம் இசைவெளியீட்டை நடத்த இருக்கிறார். ஜூன் 6 ஆம் தேதி மலேசியாவில், கோலாலம்பூரில் உள்ள பிரம்மாண்டமான ஆடிட்டோரியத்தில் சாஹசம் இசை வெளியீடு நடைபெறுகிறது!
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்த்திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் கோலாலம்பூர் செல்கின்றனர். அவர்களில் சிவகார்த்திகேயன், அனிருத், சிம்பு ஆகியோரும் அடக்கம்.