போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
குடிபோதையில் வண்டி ஓட்டி ஒரு உயிரை கொன்று, நான்கு உயிர்களை காயப்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதில் சல்மான்கானுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் பல நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் சல்மான்கானுக்கு தண்டனை கிடைத்ததை பலர் வரவேற்கவும் செய்கிறார்கள்.. அவர்களில் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ் கோபியும் ஒருவர். சினிமாவில் நேர்மையின் உச்சமாக, எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகத்தையும் பொறுத்துக் கொள்ளாதவராக நடிப்பவர் நடிகர் சுரேஷ்கோபி. சினிமாவில் எப்படியோ நிஜத்திலும் அப்படியே இருப்பவர்.. இருக்க முயற்சிப்பவர்.
“சல்மான்கான் சிறந்த மனிதர் என்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருக்க கூடாது. அப்படி ஓட்டி விபத்து ஏற்படுத்தியபின், அதிலிருந்து தப்பிப்பதற்காக வழக்கை இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்திருக்க கூடாது. விபத்தில் இறந்ததும் ஒரு மனித உயிர்தானே.. இப்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மனிதாபிமானம் சாகவில்லை என்பதை காட்டுகிறது. குடித்துவிட்டு வண்டி ஒட்டி ஒரு உயிரை கொன்ற சல்மான்கான் இந்த தண்டனை பெற தகுதியானவர் தான்” என கூறியுள்ளார் சுரேஷ்கோபி.