போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தென்னிந்திய மற்றும் வட இந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜெயப்ரதா தற்போது இந்திய பார்லிமென்ட்டில் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை ஜெயப்ரதா தமிழில் இறுதியாக, கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனது மகனை நாயகனாக வைத்து தமிழில் ஒரு படத்தையும் தயாரித்தும் வருகின்றார். ஜெயப்ரதா கடைசியாக இந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ராஜியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சஞ்சய் சர்மா இயக்கும் இந்தி படத்தில் நடிகை ஜெயப்ரதா ராணி சாஹிபா வேடத்தில் ராணியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் என்று கூறப்படுகின்றது. நடிகை ஸ்ரீதேவி புலி படத்தில் ராணியாக நடிப்பதைத் தொடர்ந்து நடிகை ஜெயப்ரதாவும் ராணியாக நடிக்கவுள்ளார்.