போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விரைவில் பிரின்ஸ் மகேஷ் பாபுவும், அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த நட்சத்திர தம்பதியினரின் மகன் கௌதம் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்களாம். இந்த பிரபல காட்டமனேனி குடும்பத்தில் இருந்து ஏற்கனவே பிரபல பத்மாலயா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இருப்பதை அனைவரும் அறிவர். இது தவிர அந்த குடும்பத்தை சேர்ந்த பிரபலமான மஞ்சுளா தலைமையில் இந்திரா ப்ரோடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும், மற்றொரு பிரபலமான ரமேஷ் பாபுவுக்கு கிருஷ்ணா ப்ரோடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் இருப்பது நினைவிருக்கலாம்.தற்போது பிரின்ஸ் மகேஷ் பாபுவும், அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து கௌதம் ப்ரோடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கின்றனர். இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற பிரபல ஹீரோக்களின் படங்கள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாகவே மகேஷ் பாபு வித்தியாசமான கதைகளத்தில் நடிக்கவே விரும்புவார். ஆனால் அவர் தொடங்க இருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனமும் வித்தியாசமான படங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.