கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
திருடா திருடி, அனந்தபுரத்து வீடு உள்பட பல படங்களில் நடித்தவர் சாயா சிங். தற்போது யாத்ரீகன் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். ஹீரோவாக கிஷோர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படிப்பிடிப்புகள் நேபாள எல்லையில் உள்ள சிலிகுடியில் நடப்பதாக இருந்தது. இதற்காக சாயாசிங், கிஷோர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் பெங்களூரிலிருந்து சிலிகுடிக்கு விமானத்தில் புறப்பட்டனர்.
படப்பிடிப்பு தொடங்குதற்கு முதல் நாள் சாயாசிங் தனது தாயாருடன் ஊரை சுற்றிப்பார்க்க காரில் சென்றார். அப்போதுதான் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பூகம்பம் ஏற்படுகிறது காரில் இருந்து இறங்கி ஓடுங்கள் என்று டிரைவர் கத்தியிருக்கிறார். அதன் பிறகு சாயாசிங்கும், அவரது தாயாரும் ஓட்டலுக்கு ஓடினர். ஓட்டலில் இருந்தவர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள். பூகம்ப பீதி முடிந்ததும் ஓட்டலுக்கு திரும்பினார்கள். சிலிகுடியை சுற்றி பூகம்பம் ஏற்பட்டு பலர் மரணம் அடைந்த செய்தி பிறகுதான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
"இறைவன் அருளால் நாங்கள் உயிர் தப்பினோம். மக்கள் பயந்தபடி அங்கும் இங்கும் ஓடிய காட்சி மறக்க முடியாதது. இயற்கையின் சக்தியையும், மனிதனின் உயிர் பயத்தையும் ஒரே நேரத்தில் கண்டபோது வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பு குறைந்திருக்கிறது" நேபாள எல்லை கிராமத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பி விட்டோம் என்கிறார் சாயாசிங்.