‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ வந்தால் அது கெடுதல் என்று சொல்லும் வாசகத்தை போட வேண்டும் என்கிற விதிமுறைக்கு பிறகும் சிகரெட், மது அருந்தும் காட்சிகள் குறையவில்லை. இந்த நிலையில் பிரபல அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் தலைவர் டாக்டர் சாந்தா, சினிமாவில் சிகரெட் குடிக்கும் காட்சிக்கு முழுமையான தடைவிதிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் சுருக்கம் வருமாறு: நாட்டில் 40 சதவிகித புற்று நோய்க்கு காரணம் புகைபிடிக்கும் பழக்கமாகும். புகையிலை கட்டுப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து இந்திய அரசு எடுக்கும் முடிவில் சிகரெட் கம்பெனிகள் உள்பட யாரும் குறுக்கிட முடியாது.
திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்ற வாசகம் போடப்படுகிறது. இந்த வாசகம் போட வேண்டும் என்கிற நிபந்தனையை நீக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர்கள் மத்திய தகவல் ஒளிபரப்பு துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறிகிறேன். அவர்களின் கோரிக்கையை ஏற்கக் கூடாது. மேலும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு சாந்தா பிரதமருக்கு எழுதிய இரண்டு கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.