‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாடலாசிரியராக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த பா.விஜய் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடைத்தை பிடித்தார். இன்றைய உயரத்தைவிட மேலும் உயரத்துக்குச் செல்ல வேண்டியவர். தடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்தது. தாய் காவியம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் பா.விஜய். அந்தப் படம் பாதியோடு ட்ராப்பாகி விட்டது. அதன் பிறகு 'ஞாபகங்கள்', 'இளைஞன்' ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் மூலம் சினிமாவில் தன்னை ஒரு நடிகராகவும் அடையாளம் காட்டிக்கொண்டாலும் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இந்த படங்களின் தோல்வியைத் தொடர்ந்து நடிகராக பா.விஜய்யின் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. பின்னர், 'தகடு தகடு' என்ற படத்தில் நடித்திருக்கிறார் பா.விஜய். இந்தப்படத்தை அடுத்து 'வில் மேக்கர்ஸ்' என்ற பெயரில் புதிய பட நிறுவனம் ஒன்றை துவங்கி பா.விஜய்யே இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். பாடலாசிரியராக படத்துறைக்கு வந்தவர் நடிகராகி இப்போது தயாரிப்பாளர், இயக்குனர் என்ற துறைகளையும் கையில் எடுத்திருக்கிறார். வெற்றி கிடைக்குமா?