‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் விஷ்வ இந்து பரிஷித்து சார்பில் எஸ்.ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்தில் என் உதிரத்தின் விதை... என்றொரு பாடலில் வெங்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள் என்ற வரி வருகிறது. தீய சக்திகளை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவுள் கடவுள் பல்வேறு அவதாரங்கள் எடுத்து இருக்கிறார். அப்படியிருக்கையில் இந்த வரி இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும், நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே என் உதிரத்தின் பாடலில் இருந்து வெக்கங்கெட்டு என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று தணிக்கை துறை மற்றும் தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 6ம் தேதி புகார் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் மே 1ம் தேதி உத்தம வில்லன் படம் வெளியாகிறது. எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று(ஏப்., 27ம் தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.