ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன், பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி நடிக்கும் மாஸ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். டீசர் பற்றிய ஒரு பார்வை...
ஏற்கெனவே கசிந்த கதைதான் டீசரில் எதிரொலிக்கிறது. கொடூர வில்லன்களால் கொல்லப்படும் சூர்யா, ஆவியாகவோ, காட்டேரியாகவோ, சக்தி வாயந்த அமானுஷ்ய சக்தியாகவோ மீண்டும் வந்து எதிரிகளை பழிவாங்குகிற கதை.
டீசரின் துவக்கத்தில் வரும் "எதிர்பார்க்கலல்ல... நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல. அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல" என்கிற வசனமும், டீசரின் முடிவில் பிரேம்ஜி "இந்த வீட்டில் இரண்டு நாளா ஏதோ அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது" என்று குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்த சூர்யா சுவரில் நடக்கிற காட்சிகளும் காட்டேரி போன்று சிங்கப்பல் காட்டி சிரிகிற காட்சியும் இதனை உறுதிப்படுத்துகிறது.
கதையின் ஒரு பகுதி வெளிநாட்டில் நடக்கிறது என்பதையும் டீசர் உறுதிப்படுத்துகிறது. பாடல் காட்சிகள் பிரமாண்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகனி வித்தியாசமான கெட்அப்பில் வில்லனாக வருகிறார். பார்த்திபன் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.