‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தை நந்தகோபால் என்பவர் தயாரித்திருக்கிறார் லக்ஷ்மண் என்பவர் இயக்கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் "டன்டனக்கா நக்கா நக்கா..." என்ற பாடல் இடம்பெறுகிறது. இதனை அனிருத் பாடி உள்ளார். தன்னை அவதூறாக சித்தரித்து இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடுகேட்டு தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் டி.ராஜேந்தர். இதற்கான சமாதான பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது டி.ராஜேந்தர் ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவின் சுருக்கம் வருமாறு: நான் தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவன். எனக்கென்று நல்ல பெயர் உள்ளது. எனது படங்களும், வசனங்களும், குரலும், பாடலும் தனித்துவம் வாய்ந்தது. தற்போது வெளியாக இருக்கும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் "டன்னக்கா நக்கா நக்கா..." என்ற பாடல் வருகிறது. இந்த பாடல் விளம்பர நோக்கத்திற்காக எனது பேச்சுகள், எனது உச்சரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனது தனிப்பட்ட உரிமையை அத்துமீறி பயன்படுத்தி உள்ளனர்.
படத்தின் ஹீரோ என்னுடைய ரசிகராக நடித்துள்ளதாக அந்த ஹீரோவே தெரிவித்துள்ளார். எனவே படம் முழுக்க என்னை கிண்டல் செய்திருக்கலாம் என்று கருதுகிறேன். என்னை வைத்து வியாபாரம் செய்வதாக நினைக்கிறேன். எனவே நீதிமன்றம் படத்தை பார்க்க குழு அமைத்து அவர்களிடமிருந்து அறிக்கை பெற வேண்டும். பாடலை டி.வி.சேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். என்னுடைய பெயருக்கும் களங்கம் விளைவித்தற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு பெற்றத் தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.