காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
இளையராஜா பாடல்களை பயன்படுத்திய வகையில் ஆடியோ நிறுவனங்கள் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கம் நல்ல நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இளையராஜா சாரின் பாடல்கள் ரைட்ஸ் தொகையாக 10 கோடி ரூபாய் வந்துள்ளது. இன்னும் 100 கோடி வசூலிக்க திட்டமிட்டிருக்கிறோம். தொலைக்காட்சி சேனல்கள் மாதத்திற்கு இரண்டு படங்கள் வீதம் ஆண்டுக்கு 24 சிறிய படங்களாவது வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதுவும் நடைமுறைக்கு வரும். இனி சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கலங்கத் தேவையில்லை என்றார்.