மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

இளையராஜா பாடல்களை பயன்படுத்திய வகையில் ஆடியோ நிறுவனங்கள் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கம் நல்ல நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இளையராஜா சாரின் பாடல்கள் ரைட்ஸ் தொகையாக 10 கோடி ரூபாய் வந்துள்ளது. இன்னும் 100 கோடி வசூலிக்க திட்டமிட்டிருக்கிறோம். தொலைக்காட்சி சேனல்கள் மாதத்திற்கு இரண்டு படங்கள் வீதம் ஆண்டுக்கு 24 சிறிய படங்களாவது வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதுவும் நடைமுறைக்கு வரும். இனி சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கலங்கத் தேவையில்லை என்றார்.




