‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கார் ரேஸ் போலவே அஜித்திடம் பல தனித்திறன்கள் உள்ளன. அதில் போட்டோகிராபியும் ஒன்று. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கேமராவை எடுத்துச்செல்கிறார். அங்கே இயற்கையாக காணும் காட்சிகளை படம் பிடித்துவிடுவார். இப்படி எடுத்த படங்களை சேமித்துவைத்திருக்கிறார்.அதே போல, என்னை அறிந்தால் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பு தளங்களில் கண்ட ஏராளமான காட்சிகளை படம் பிடித்துவைத்துள்ளார். அதுமட்டுமில்லை, இரண்டாவது கேரக்டரில் நடித்த பார்வதி நாயரை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துளார் அஜித். இந்த படங்களை பார்வதி நாயர் பிரேம்செய்து தன் வீட்டில் ஏகப்பட்ட இடங்களில் மாட்டியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட தல, பார்வதியை பாராட்டியதோடு தற்போது தான் நடித்துவரும் படத்தில் பார்வதிக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு எடுத்து படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு போன் செய்துள்ளாராம். படத்தால் கிடைத்த படவாய்பை நினைத்து நெகிழ்ந்து போனாராம் பார்வதி நாயர்.