போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ்மோகன். இந்த இரண்டு படங்களுக்குமே யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில், வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணா, மா.க.பா.ஆனந்த் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்க, மோனல் கஜார் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ஓரளவு வெற்றி பெற்றது. அதனால் அதையடுத்து மீண்டும் ஒரு கிராமத்து கதையை ரெடி பண்ணியுள்ள ராஜ்மோகன், அடுத்தபடியாக மார்க்கெட்டில் பேசப்படும் நடிகர் யாரையாவது வைத்துதான் இயக்க வேண்டும் என்று சில நடிகர்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். அதில் அட்டகத்தி தினேஷ் குறிப்பிடத்தக்கவராம். அவருக்குதான் ராஜ்மோகன் உருவாக்கியுள்ள படம் பொருத்தமாக இருக்குமாம். அதனால் அவரிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். ஆனால் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தினேஷ் இன்னும் அவருக்கு சரியான பதில் கொடுக்கவில்லையாம்.