‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள ஓ காதல் கண்மணி படம் காதலர்கள் மத்தியில் மட்டுமல்லாது அனைத்து ரக திரைரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கிலும் திரைக்கு வந்த ஓகே கண்மணி படம், அங்கும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதிலும் தெலுங்கு ஓகே கண்மணி வரவேற்பிற்கு காரணமான நடிகர் நானி என்று கூறப்படுகின்றது. தெலுங்கில் நடிகர் துல்கர் சல்மானுக்கு பின்னணி பேசியுள்ளது நடிகர் நானி தானாம். இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகரான நானியை இயக்குநர் மணிரத்னம் அழைத்து நாயகனுக்கு பின்னணி பேசுமாறு கேட்டுக் கொண்டதும் மறுக்காமல் நானி ஒத்துக்கொண்டுள்ளார். தெலுங்கு ஓகே கண்மணி படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ள நானியின் குரலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றதாம்.