போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் நட்பதிகாரம் 79. இதில் பிரபல தயாரிப்பாளர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத், வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த அம்ஜத், தெலுங்கு நடிகை தேஜஸ்வி, ரேஷ்மி மேனன் நடித்துள்ளனர். தீபக் நீலாம்பூர் என்ற புதுமுகம் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது நட்பை பற்றிய படம் என்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன். அவர் மேலும் கூறியதாவது:
நட்பை பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவரை கவுரவப்படுத்தும் வகையில்தான் நட்பை பற்றிய குறள் அடங்கிய அதிகாரத்தின் தலைப்பை படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். நட்பும் காதல் போலத்தான், ஊடலும், கூடலும் நிறைந்தது. சின்ன சின்ன விஷயங்கள் கூட காயப்படுத்தும். இரண்டு இளைஞர்கள், இரண்டு இளைஞிகள் நட்பாக இருக்கிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு எப்படி கையாளப்படுகிறது என்பதுதான் கதையின் களம். திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என நட்பின் பரிமாணத்தை பேசுகிறது படம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள இடைவெளி எது, அது எப்போது குறைகிறது, எப்போது இணைகிறது என்பது போன்ற மென்மையான விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது படம்.