போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சூர்யா தற்போது மும்பையில் இருக்கிறார். மாஸ் படத்திற்கு பிறகு 'யாவரும் நலம்' விக்ரம்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் முதல்கட்ட பணிகளுக்காக சென்றுள்ளார். இந்தப் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் சூர்யா, இந்தி படத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிப்பதாவும், நந்திதா சின்ஹா என்பவர் தயாரிப்பதாகவும், அதனால்தான் அவர் மும்பை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை சூர்யா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "சூர்யா இந்திப் படம் எதிலும் நடிக்கவில்லை. அந்த தகவல்கள் முற்றிலும் தவறானது. நந்திதா சின்ஹா என்கிற தயாரிப்பாளர் யார் என்றே தெரியாது அவரை பார்த்ததுகூட இல்லை. தயவு செய்து தவறான தவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.