போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
திருட்டுப்பயலே, நான் அவனில்லை உள்பட பல படங்களில் நடித்தவர் ஜீவன். அதையடுத்து கவிதாலயாவின் கிருஷ்ணலீலை படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னமும் வெளிவரவில்லை. அதனால் ஜீவனின் மார்க்கெட் சரிந்தது. படமே இல்லாமல் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்த நிலையில், டைரக்டர் ஷக்தி சிதம்பரம் ஜெயிக்கிற குதிரை என்ற படத்துக்காக அவரை மறுபிரவேசம் செய்ய வைத்தார். அப்படத்தின் படப்பிடிப்பும் தொடர்ச்சியாக 45 நாட்கள் நடந்து வந்தது. அதையடுத்து ஜீவனின் மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியதாக கருதி அதிபர் என்ற படத்துக்கும் அவரை ஒப்பந்தம் செய்தனர். அந்த படவேலைகளும் நடந்து வருகிறது. அதன்காரணமாக ஜீவன் ஏற்கனவே நடித்து கிடப்பில் கிடந்த பயணிகள் கவனத்திற்கு, தூதுவன் உள்பட சில படங்கள் தூசு தட்டப்பட்டன. ஆனால், தற்போது அவர் நடித்து வந்த ஜெயிக்கிற குதிரை படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கிடப்பில் கிடக்கிறது. இதற்கு முன்பு மச்சான் என்ற படத்தை இயக்கி வெளியிட்ட ஷக்தி சிதம்பரம் அந்த படத்திற்காக வாங்கியிருந்த பைனான்ஸ் காரணமாக இப்படத்துக்கு புதிய பைனான்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதனால் இதுவரை ஜெயிக்கிற குதிரை படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த ஜீவன் இப்போது அதிபர் படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதோடு புதிய படங்களில் கமிட்டாகவும் தீவிர பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்.