கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
ஒரு காலத்தில் படத்தின் தலைப்பு மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் இல்லையென்றால் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள். என்னோட படத்துக்கு புதிய வார்ப்புகள் என்று தலைப்பு வைத்தபோது, இது என்ன வார்ப்புகள் மக்களுக்கு இந்த வார்த்தை புரியுமா என்றார்கள். இப்போது எப்படியெல்லாம் படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது. என் சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் மாறி வருவோம் என்று வயா மீடியாவில் நிழல்கள் படத்தை எடுத்தேன். படம் தோற்றது. அதற்கு பிறகு என் பாதையை மாற்றி கொண்டேன். ஆனால் இப்போது இளைஞர்கள் புதுசு புதுசாக சிந்தித்து படங்கள் எடுக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அதே நேரத்தில் மூத்த கலைஞர் என்னை ஜாம்பவான் என்று அழைக்கிறார்கள். இனி அப்படி என்னை கூப்பிடவேண்டாம். என்னை விட ஜாம்பவான்கள் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் ஜாம்பவான்கள். சினிமாவுக்கு ஒப்பனை அவசியம் தேவை. இப்போது அது தேவை இல்லை என்கிற ஒரு நிலையை படைப்பாளிகள் உருவாகி விட்டார்கள். அவர்கள் தான் ஜாம்பவான்கள் என்கிறார் இயக்குனர் பாரதிராஜா.