அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் |
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது விமல் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன. அவற்றில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்கும் மாப்ளே சிங்கம் படம் அடுத்து வெளிவரவிருக்கிது. இந்தப்படத்தின் வெற்றியை நம்பி மூன்று படங்கள் காத்திருக்கின்றன. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவான ரெண்டாவது படம் மற்றும் பசுபதியுடன் விமல் இணைந்து நடித்திருக்கும் அஞ்சல, நீயெல்லாம் நல்லா வருவடா ஆகிய படங்கள்தான் அவை.
பல மாதங்களுக்கு முன்பே ரிலீஸுக்குத் தயாராகி காத்துக் கொண்டிருக்கின்றன இந்த 3 படங்களும். இவற்றில் சந்தானம் பேசிய வசனத்தை தலைப்பாக வைத்து நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்தை எடுத்தனர். அந்த வசனத்தையே மக்கள் தற்போது மறந்துவிட்டனர். அதுமட்டுமல்ல சந்தானத்தின் மார்க்கெட்டும் தற்போது சரிவடைந்துவிட்டது. எனவே நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின் தலைப்பை தற்போது காவல் என மாற்றி வைத்திருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் கே.பாலாஜி தயாரிப்பில் மம்பட்டியான் தியாகராஜன் நடித்த படத்தின் பெயர்தான் காவல். அர்த் சத்யா என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக்காக தயாரிக்கப்பட்ட படம் அது. நீயெல்லாம் நல்ல வருவடா படத்துக்கு காவல் என்ற தலைப்பு வைக்கப்பட்டாலும் கே.பாலாஜியின் நிறுவனத்தில் அனுமதி பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக காவல் என்ற தலைப்பை பயன்படுத்த விமல் படத்துக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.