ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தபோது பெங்களூர் நடிகையான நந்திதாவுக்கு கோடம்பாக்கமே புதிது என்பதால் சில சினிமா மேனேஜர்களை நம்பித்தான் அவர் இருக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் மேனேஜர்கள் மூலம் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி படவாய்ப்புகளை பெற்று வந்தார் நந்திதா. ஆனால், அப்படி அவருக்கு படம் வாங்கிக்கொடுத்த சில மேனேஜர்கள், கம்பெனியில் ஒரு தொகை பேசிவிட்டு, இவரிடம் அதைவிட குறைவான தொகையை சொல்லி ஒப்பந்தம் செய்து விட்டுள்ளனர். ஆக, 10 லட்சம் சம்பளம் பேசினால் நந்திதாவிடம் ஐந்து லட்சம்தான் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இப்படி தொடர்ந்து தன்னை மேனேஜர்கள் மோசடி செய்ததை சமீபத்தில்தான் கண்டுபிடித்திருக்கிறார் நந்திதா. அதனால்தான் தன்னை ஏமாற்றி வந்த மேனேஜர்கள் தற்போது விரட்டியடித்து விட்டார் நந்திதா. அதேசமயம், இனி எனது அம்மா,அப்பாவே எனக்கு மேனேஜர்களாக செயல்படுவார்கள் என்று அவர் அறிவித்தபோதும், தானே கதை கேட்பது மட்டுமின்றி கால்சீட், சம்பளம் அனைத்தையும் பேசுகிறார் நந்திதா. தற்போது சினிமா அவருக்கு அத்துபடியாகி விட்டதால், ஆல் இன் ஆல் அழகுராஜாவாகியிருக்கிறார் அட்டகத்தி நந்திதா.