‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள இயக்குனர் ஆஷிக் அபு இயக்கவுள்ள படத்தில் இருந்து நடிகை மஞ்சு வாரியர் அதிக சம்பளம் கேட்டதற்காக விலக்கப்பட்டார் என்று செய்தி வெளியாகி கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ஆஷிக் அபு பதறிப்போய்விட்டார். உடனே தனது பேஸ்புக்கில், “ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தியை கிளப்புகிறீர்கள்.. மஞ்சு வாரியர் என் படத்தில் நடிக்கிறார். அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறுவதும் தவறு, அதனால் தான் அவர் விலகியதாக கூறுவதும் தவறு” என கொந்தளித்துள்ளார்.
த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படம் ராணி-பத்மினி என்கிற இரண்டு பெண்களின் பயணத்தை பற்றிய கதை. ராணியாக ரீமா கல்லிங்கலும் பத்மினியாக மஞ்சு வாரியரும் நடிக்க இருக்கிறார்கள். பயணம் என்றதும் உடனே இருவரின் வாழ்க்கை பயணம் என்று நினைத்துவிடாதீர்கள். கொச்சியில் இருந்து டெல்லி செல்லும் இந்த இருவரின் பயணத்தில் நடக்கும் த்ரில்லிங்கான அனுபவம் தான் படத்தின் மொத்தக்கதையும். ஷ்யாம் புஷ்கரன் என்பவர் தான் படத்திற்கான கதை எழுதியுள்ளார். மலையாள சினிமாவில் ஒரு புதுமுயற்சியாக இந்தப்படம் இருக்கும் என்கிறார் ஆஷிக் அபு.