செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |
இயக்குநர் விஜய்யை பெரிய அளவில் பேச வைத்த படம் ''மதராசப்பட்டினம்''. ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான இப்படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் பழைய சென்னையை நம் கண்முன் நிறுத்தியது. எமிக்கும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குநர் விஜய்யும் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக தகவல் வௌியாகியுள்ளது. தற்போது விஜய், விக்ரம் பிரபுவை வைத்து, ''இது என்ன மாயம்'' படத்தை இயக்கி வருகிறார். அதேப்போல் ஆர்யாவும், புறம்போக்கு, யட்சன், மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சுவங்க படங்களில் பிஸியாக இருக்கிறார். இருவரும் அவர்களது படங்களை முடித்த பின்னர் இந்த புதிய படத்தில் இணைவார்கள் என தெரிகிறது.