போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஐ படத்தை முடித்துவிட்டு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஐ படம் வெளியாவதற்கு முன்பே 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் கடந்த 3 மாதங்களாக இப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 10 எண்றதுக்குள்ளே படத்தை முடித்துவிட்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும், அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றில் கௌதம் மேனன் இயக்கும் படம் ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. அதற்கு முன் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப்படத்துக்கு மர்ம மனிதன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த தலைப்பை வேறு யாரும் பதிவு செய்யாமல் இருந்தால், இந்த தலைப்பே இறுதியானதாக இருக்குமாம். வேறு யாராவது இதே தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தால் வேறு தலைப்பை சூட்டுவார்களாம்.