இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பொங்கி எழு மனோகரா படத்தில் அறிமுகமானவர் கேரளத்து நடிகை அருந்ததி நாயர். இர்பான்-சிங்கம்புலி முக்கிய வேடத்தில் நடித்த அப்படத்தை ரமேஷ் ரங்கசாமி இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லை. அதனால் சில வாரங்கள் சென்னையில் முகாமிட்டிருந்த அருந்ததி நாயர், தோல்வி முகத்துடன் பின்னர் கேரளத்துக்கு திரும்பிச்சென்று விட்டார்.
அதேசமயம், தன்னை தேடிவந்த சில சின்ன பட்ஜெட் படங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஓரங்கட்டி வந்த அவர், பெரிய நடிகர்களின் படங்களுக்காக கேரளாவில் இருந்தபடியே கல்லெறிந்து வந்தார். அப்படி எறிந்தபோது கிடைத்த படம்தான் விஜய் ஆண்டனி நடிக்கும் சைத்தான். இந்த படத்தில் நடிப்பதற்கு அவரிடம் நேரடியாக விஜய் ஆண்டனியே தொடர்பு கொண்டு பேசினாராம்.
ஆனால், அருந்ததி நாயரை 6 மாதத்துக்கு அக்ரிமெண்டு போட்டு விட்டாராம். இந்த படத்தில் கமிட்டான பிறகு இன்னும் 6 மாதங்களுக்கு எந்த படத்திலும் கமிட்டாகக்கூடாது என்று கண்டிசன் போட்டு விட்டாராம். அப்போது, அவர் படத்தில் சான்ஸ் கிடைத்ததே பெரிய விசயம் என்ற சந்தோசத்தில் ஒப்பந்தமாகி விட்டாராம் அருந்ததி நாயர்.
ஆனால், இப்போதுப் பார்த்தால் கதாநாயகிக்கு அதிகபட்சம் 15 நாட்கள்தான் படப்பிடிப்பே இருக்கும். அப்படியிருக்க இந்த படத்தில் 6 மாதத்துக்கு வேறு படத்தில் ஒப்பந்தமாக முடியாத அளவுக்கு அக்ரிமெண்டில் சைன் போட்டு விட்டோமே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் அருந்ததி நாயர். மேலும், பொங்கி எழு மனோகரா படம் வெளியான நேரத்தில் யாருமே பட விசயமாக தொடர்பு கொள்ளாத நிலையில், இப்போது விஜய் ஆண்டனி புக் பண்ணிய பிறகுதான் அவரை விட பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க அருந்ததி நாயரை தொடர்பு கொண்டு பேசுகிறார்களாம். இதனால் அவசரப்பட்டு அக்ரிமென்டில் சிக்கிக்கொண்டேனே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் அவர்.