ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சமீபகாலமாக படங்களுக்கு கதை ரெடி பண்ணுவதை விட டைட்டீல் வைப்பதற்குதான் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக, கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்துக்கு கிட்டத்தட்ட 250 டைட்டீல்களை யோசித்த பிறகுதான் இந்த டைட்டீலை முடிவு செய்தேன் என்றார் சுசீந்திரன்.
அதுவும் ரஜினி நடித்த படத்தின் தலைப்பு அது. அதேபோல், அஜீத்தின் ஆரம்பம் படம் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடிந்த பிறகும்கூட அப்படத்திற்கான தலைப்பை முடிவு செய்யவில்லை விஷ்ணுவர்தன். எந்த டைட்டீலை சொன்னாலும அஜீத்துக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கடைசியில் பேச்சுவாக்கில் ஆரம்பம் என்று வைக்கலாமா? என்று கேட்க, சூப்பர், இதுதான் கதைக்கேற்ற டைட்டீல் என்று ஓகே சொன்னாராம் அஜீத். ஆக, இப்போதெல்லாம் டைட்டீல்தான் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.
இந்தநிலையில், புலியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ராஜா ராணி டைரக்டர் அட்லி ஏற்கனவே கதையை ரெடி பண்ணிவிட்டு விஜய்யின் வருகைக்காக பல மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த வேளையில், அவரும் டைட்டில் ஆலோசனையில் இறங்கியிருக்கிறார். அதோடு தான் யோசிக்கும் டைட்டீல்களை அவ்வப்போது விஜய்யை சந்திக்கும்போதெல்லாம் அவரது கவனத்துக்கும் கொண்டு சென்று வருகிறாராம். ஆனபோதும, இன்னும் விஜய்யின் மனங்கவர்ந்த தலைப்பு செட்டாகவில்லையாம்.