‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பீதி தொற்றி கொண்டுள்ளது. இதுவரை 1000 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுக்க பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி செல்கின்றனர். பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டிலும் பன்றிக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷாவும், ஜெயம் ரவியும், ''அப்பாடக்கர்'' படப்பிடிப்பில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இருந்த போட்டோவை சமூக வலைதளங்களில் வௌியிட்டிருந்தனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ளார். இதனால் ஒருவேளை த்ரிஷாவுக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் த்ரிஷாவோ, தனக்கு பன்றிக்காய்ச்சல் எதுவும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊசி போட்டு கொண்டதாக தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.