இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள நாதமேட்டில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்.,க்கு கோயி்ல் கட்டப்பட்டு வருகிறது. எந்த அரசியல் கட்சியின் பங்கேற்பும் இன்றி இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைவாணன், அவரது மனைவி சாந்தி, திருவேர்காடு சகாதேவன், விருகை மகாதேவன், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாஷா, கலைவேந்தன் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான எம்.ஜி.ஆர்., ரசிகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.