‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருமணம் செய்து கொண்டதும் குடும்பம் குழந்தை குட்டி என்று நடிகைகள் நடிப்புக்கு குட்பை சொல்லி வந்த காலம் மலையேறிக்கொண்டிருக்கிறது. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா, அதன்பிறகுதான் பிரகாஷ்ராஜூடன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். சில படங்களில் கேரக்டர்களில் நடித்தவர் இப்போது நல்ல வேடங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபாலையும், இவர் மீண்டும் நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம், திருமணத்திற்கு முன்பு சமுத்திரகனியின் கிட்னா படத்தில் கமிட்டாகியிருந்தார். அவரது திடீர் திருமண அறிவிப்பை கேள்விப்பட்டதும் அவர் மீதான கிரேஸ் போய் விடும் என்று உடனடியாக மாற்று நடிகையை அந்த படத்திற்கு புக் பண்ணினார் சமுத்திரகனி.
ஆனபோதும், அமலாபால் தொடர்ந்து மலையாளத்தில் தான் கமிட்டாகியிருந்த மிலி படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்தார். அதையடுத்து தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஹைக்கூ படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தோடும் அவர் சினிமா கடலை விட்டு கரையேறப்போவதில்லையாம். மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க கதை கேட்டிருப்பதாக கூறி வருகிறார் அமலாபால்.