‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல பின்னணிப் பாடகரான கே.ஜே.யேசுதாஸ் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அவரது மகனான பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் அவரது அப்பாவுக்கு நேர்மாறானவர். தன் அப்பாவின் குரல்வளத்தைக் கொண்டிருப்பதால் சுலபமாக பாடகரானவர் விஜய் யேசுதாஸ். சில பல ஹிட்பாடல்களைப்பாடி உள்ள அவர் தன் மனைவி உடன் இணைந்து ஈவன்மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வருகிறார். அதனால் பாடுவதில் கவனம் செலுத்த முடியாமல்போய், பாடகர்களுக்கான ரேஸில் பின் தங்கினார்.
சின்ன வயதிலேயே நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட விஜய் யேசுதாஸ், விஜய் நடித்த தலைவா படத்தில் வில்லனாக நடிக்க ஓப்பந்தமானார். பிறகு ஏனோ அந்தப் படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் யேசுதாஸ். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம்.
பாலாஜி மோகன் இயக்கி வரும் மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து விஜய் யேசுதாஸிடம் கேட்டபோது, பின்னணி பாடி வந்த எனக்கு கேமராவுக்கு முன்னாடி நின்று நடிப்பது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கிறது. காக்கி சட்டை அணிந்ததும் என்னை அறியாமல் ஒரு வீரம் எனக்கு வந்து விட்டது. சிறப்பாக நடிக்க தனுஷ் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார் என்று கூறியிருக்கிறார்.
மாரி படத்தில் தன் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து நடிக்க இருக்கிறாராம். இவரைப்போலவே பாடகர் க்ரிஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் ரெடியாகியும் பிசினஸ் ஆகாமல் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.