ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ் ஹீரோக்களில் தெலுங்கில் அதிக ரசிகர்களை கொண்டவர்கள் ரஜினி, சூர்யா, விஷால், கார்த்தி. இவர்களின் படங்களுக்கு அங்கு தனி மவுசு இருக்கும். இவர்களின் தமிழ் படங்கள் சில வாரங்களுக்கு பிறகு தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும். 200 அல்லது 250 தியேட்டர்களில் வெளியாகும்.
இந்த நான்கு பேரில் விஷால் மட்டும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் இவர் படங்கள் இன்னும் ஸ்பெஷல். விஷாலின் நான் சிவப்பு மனிதன் தெலுங்கில் இந்துருடு என்ற பெயரில் 300 தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அவர் நடித்த ஆம்பள மகாமகராஜு என்ற பெயரில் இன்று (பிப் 27) ஆந்திராவில் ரிலீசானது.
இதுவரை இல்லாத அளவிற்கு 475 தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. இது தெலுங்கில் வெளியான டப்பிங் படங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான சாதனையாகும். தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக விஷால் படம் ரிலீசாகியுள்ளது. அதோடு முதல் மூன்று தினங்களுக்கு முன்பதிவும் முடிந்துள்ளது. தமிழ்நாட்டில்கூட இத்தனை தியேட்டர்களில் ஆம்பள ரிலீசாகவில்லை. படத்தில் நடித்துள்ள ஹன்சிகா, ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, வைபவ் ஆகியோரும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதும் படத்தின் வரவேற்புக்கு காரணம்.
ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். விஷாலுடன் ஹன்சிகா மோத்வானி, வைபவ், சந்தானம், சதீஷ், ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, மதுரிமா, மாதவி நடித்திருந்தார்கள். சுந்தர்,சி மற்றும், விஷாலின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது ஆம்பள தமிழில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.