‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கோலிவுட்டில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஹரி தான், தாமிரபரணி படத்தில் பானுவை அறிமுகப்படுத்தினார். பிழைக்க தெரிந்த நயன்தாரா இன்று வரை கொடிகட்டி பறக்கிறார். இளசு, பெரிசு என பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் நடித்து விட்டார். ஆனால், பானு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே நடித்துள்ளார். இதற்கான காரணத்தை பானு தான் கணக்குப் போட வேண்டும். இந்நிலையில் மலையாளம், தெலுங்கு என்று பானுவுக்கு விழுந்த இடைவெளிக்கு காரணம் சொன்னாலும் மீண்டும் சரிந்த இடைவெளியை சரி செய்து தமிழ் சினிமாவில் பிரகாசிக்க வேண்டும் என முடிவு எடுத்து விட்டார். தற்போது சந்தானம் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் திரைக்கு வந்தால் எல்லா இயக்குனரின் பார்வையும் தன் மீது விழும் என்று நம்புகிறார். அடுத்து, பாம்பு சட்டை படத்தில் முன்னணி பாத்திரத்தில் பாபிசிம்ஹா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் பெரும்பகுதி நடப்பதால் சென்னையிலேயே தங்கி நடித்து வருகிறார் பானு. இதிலிருந்து பானுவின் திட்டம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார் பானு.