‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சில சமயம் ஒரே மாதிரியான இரு நிகழ்வுகள் ஏதேச்சையாக நடந்து நம்மை ஆச்சர்யத்தில் தள்ளும். மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான 'ஐ' படத்தில் இவர் ஒரு டாக்டராக, சைலன்ட் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் விக்ரமை பழிவாங்குவதற்காக அவருக்கு நோயை பரப்பும் மருந்தை ஊசி மூலம் செலுத்துவார்.. அதனால் விக்ரமின் முகம் படிப்படியாக மாறி, இறுதியில் அகோரமாகிவிடும். இது சுரேஷ்கோபி, தான் விரும்பிய பெண்ணை, விக்ரம் திருமணம் செய்ய இருப்பது கண்டு, பொறுக்கமாட்டாமல் தனது சுயநலத்திற்காக செய்த வில்லத்தனம்..
கடந்த வருடம் இறுதியில் மலையாளத்தில் வெளியான 'அப்போதிக்கரி' என்கிற படத்திலும் சுரேஷ்கோபி நரம்பியல் டாக்டராக நடித்திருந்தார்.. இதில் நல்ல மருத்துவரான அவரை, அவர் வேலைபார்க்கும் மருத்துவமனை நிர்வாகம் ஸ்டெம் செல் பரிசோதனை முயற்சியை மேற்கொள்ள சொல்லி வற்புறுத்தும்.. அதாவது பிராணிகளின் மீது செய்து பார்க்க்கவேண்டிய சோதனை முயற்சிகளை நோயாளிகளாக வரும் மனிதர்கள் மீது செயல்படுத்தி பார்ப்பது.
குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கட்டணம் கட்ட முடியாமல் இருக்கும் நோயாளிகளை, அவர்களது கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக சொல்லிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் கையெழுத்தும் வாங்கிவிட்டு, அவர்கள் மீது இந்த ஸ்டெம் செல் பரிசோதனை முயற்சியை மேற்கொள்வார்கள். டாக்டரான சுரேஷ்கோபியும் தனது சூழ்நிலையால் வேறு வழியின்றி இதற்கு உடன்பட்டு நோயாளிகளுக்கு ஊசி போடுவார்..
அந்த மருந்தின் வீரியம் தாங்காமல், ஒவ்வொரு நோயாளிகளுக்கும், முடி உதிர்வது, முகம் மாறுவது, சிரித்தாலோ அழுதாலோ காது வலிப்பது, வெயிலை தாங்கமுடியாமல் போவது, வெளிச்சத்தை பார்க்க அஞ்சுவது என விதவிதமான பக்க விளைவுகள் ஏற்படும்.. ஆக ஹீரோவோ, வில்லனோ இரண்டு கதாபாத்திரங்களிலும் டாக்டராகவே வந்து கிட்டத்தட்ட ஒரேமாதிரியான ஊசியைத்தான் போட்டிருக்கிறார் சுரேஷ்கோபி.. ஏதேச்சையாக நிகழ்ந்தாலும் இது மிகப்பெரிய ஆச்சர்யம் தானே..