போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கோடம்பாக்கம் சினிமாவில் குறிப்பிடக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பிறகு திரைக்கு வரும். அந்த வகையில் தானே இசையமைத்து நடித்து இயக்கி உள்ள படம் இசை. இப்படம் 30.01.2015 அன்று திரைக்கு வர ரெடியாக இருந்தது. படத்துக்கான விளம்பரங்களும் படு விமரிசையாக செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் வழக்கம் போல இசை படத்துக்கும் சிக்கல் வந்து படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இதனால் அப்செட்டாகி இருப்பது சூர்யா தரப்பு மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்களும் தான் என்ன பிரச்சனை என்றால், கியூப் முறையில் படம் உருவாகி உள்ளது. அதனால் கியூப்க்கு கட்ட வேண்டிய ரூ.5 லட்சம் பணத்தை சூர்யா தரப்பு தரவில்லையாம். இதனால் கியூப்காரார்கள் பணத்தை கட்டிவிட்டு படத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கறாராக கூறிவிட்டனர். இதனால் இசை திரைக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்செய்தி கேட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.