தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
எந்த நேரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் தனது 'லாலிசம்' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தாரோ, அப்போதிருந்து அவர்மீது தேவையில்லாத வீண்பழிகள் குத்திக்கிழிக்கும் அம்புகளாய் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இசை நிகழ்ச்சிக்காக அவர் கேரள அரசிடம் இரண்டு கோடி ரூபாய் கேட்டார் என்று பரவிய செய்திதான் பிரச்னையின் ஆணிவேர்.. மலையாள இயக்குனர் வினயன் கூட, தான் ஏதோ ஒரு மேதாவி போல, உண்மை எதுவென அறிந்துகொள்ளாமல் மோகன்லாலை விமர்சித்திருக்கிறார்.
ஆனால் இந்த இசைக்குழுவின் பிரதான இசையமைப்பாளரான ரதீஷ் வேகா இது பற்றி கூறும்போது, “மோகன்லால் இசைக்குழுவை ஆரம்பித்ததும், தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கவிழாவின்போது இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்ததும், அவரது ஆத்மார்த்தமான இசை ஆர்வத்தினால் தான்.. இந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் நேரத்தில், அவர் இந்த இரண்டுகோடி ரூபாயை, ஒரு படத்தில் நடித்து சம்பாதித்து விடுவார். அப்படியிருக்க தேவையில்லாமல் அவர்மீது இரண்டுகோடி ரூபாய் கேட்டார் என அபாண்டமாக வீண்பழி சுமத்துவது அர்த்தமற்றது” என கொதித்திருக்கிறார்.