ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. என்ன பேசுகிறோம் என தெரிந்தே, எகிடு தகிடாக எதையாவது பேசி, வான்ட்டடாக வம்பை விலைகொடுத்து வாங்குவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை. அப்படித்தான் இப்போது டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு யோசனை சொகிறேன் என, அவர் ஆரம்பித்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியைப்பற்றி தேவையில்லாமல் வாயை கொடுத்துள்ளார்..
சிரஞ்சீவி தற்போது தனது 150வது படத்திற்கான கதையையும் அதை இயக்கப்போகும் இயக்குனரையும் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் “சிரஞ்சீவியின் 150வது படத்தை மற்ற இயக்குனர்களிடம் ஒப்படைப்பதைவிட அவரே இயக்குவது தான் சிறந்ததாக இருக்கும்.. சிரஞ்சீவி சினிமாவின் அனைத்து துறைகள் பற்றியும் கரைத்து குடித்தவர். அதனால் அவரே படத்தை இயக்க தகுதியானவர்தான்” என்று கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. “அப்படி சிரஞ்சீவி அவரது படத்தை இயக்கினால் அது நிச்சயம் அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட மோசமாக இருந்துவிடாது என்று நம்பலாம்” என ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் டிவிட்டரில் போட இப்போது சிரஞ்சீவியின் ரசிகர்களின் அக்னிப்பார்வைக்கு இலக்காகியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.. ஒருவேளை, தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்தபின் படத்தில் நடிப்பதை விட்டுவிட்ட விஜயகாந்த், கொஞ்சநாள் கழித்து அவர் நடித்த படமான 'விருதகிரி'யை அவரே இயக்கிய சம்பவத்தை தான் தனது யோசனையாக சொல்லியிருப்பாரோ ராம்கோபால் வர்மா..?