‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை நயன்தாரா டாஸ்மாக்கில் பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி இணைய தளத்தில் வெளியானது. அது வைரலாக பரவியது. நயன்தாரா மதுக்கடையில் சென்று பீர்வாங்கும் காட்சியை கண்டித்து சில அமைப்புகள் அறிக்கை வெளியிட்டது. போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் மதுக்கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சி ஒரு சினிமாவுக்காக எடுக்கப்பட்ட காட்சி. பாண்டிச்சேரியில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு கடையில் இந்த காட்சி எடுக்கப்பட்டது. நான் என்னை பற்றி வரும் எந்த கிசுகிசுவிற்கும் விளக்கம் தருவதில்லை. ஆனால் நான் நடித்த ஒரு சினிமா காட்சியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பிரச்னையை தூண்டிவிடுகிற மாதிரி ஊதி பெரிதாக்குவதை கண்டிக்கிறேன். இது சிறுபிள்ளைத்தனமானது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு கடையில் நான் போய் மது வாங்க முடியுமா? இதை ஏன் யாரும் யோசிக்க வில்லை. எனவே சினிமாவுக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சியை யாரும் உண்மை என்று நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நயன்தாரா அறிக்கையில் கூறியுள்ளார்.