ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும், கேரளாவிலும் வெளியானது. அனைத்து ஏரியாக்களிலும் ஐ படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றாலும், தமிழ்நாடு ஆந்திராவைவிட கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கடந்த 14-ஆம் தேதி கேரளா முழுக்க வெளியான ஐ படம் இன்று வரை ஹவுஸ்புல்தான்! திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஐ படம் வெளியான அன்று பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியில் தியேட்டர் காவலாளி ஸ்ரீகுமார் என்பவர் ஈடுபட்டிருந்தபோது, நெரிசலில் சிக்கி கீழே விழுந்திருக்கிறார். கூட்டம் அவரை மிதித்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது மொத்த உடம்பே செயலிழந்துபோய்விட்டதாம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி காவலாளி ஸ்ரீகுமாருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். அதோடு, இந்த தகவலை படத்தின் ஹீரோ விக்ரம், மற்றும் இயக்குநர் ஷங்கருக்கும் தெரிவித்த சுரேஷ் கோபி, அவர்களையும் ஸ்ரீகுமாருக்கு உதவி செய்யும்படி வற்புறுத்தி இருக்கிறார். சுரேஷ்கோபியின் பேச்சை தட்டமுடியாமல், நிச்சயம் உதவி செய்வதாக கூறியிருக்கிறார்களாம் ஷங்கரும், விக்ரமும்.