‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலா தயாரிப்பில் களவாணி சற்குணம் இயக்கியுள்ள படத்திற்கு சண்டிவீரன் என்ற அறிவித்திருக்கும் நிலையில், கார்த்திக்கிற்கு பருத்தி வீரன் மாதிரி எனக்கு இந்த சண்டி வீரம் அமையும் என்று தனது சினிமா நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்து வருகிறார் அதர்வா. மேலும், அவர் மதுரையில் சண்டித்தனம் செய்பவராக நடித்தார், நானோ தஞ்சாவூர் பகுதியில் சண்டித்தனம் செய்பவராக நடித்திருக்கிறேன்.
அதோடு, பேண்ட் சண்டையின மடிப்பு கலையாத வேடங்களில் நடித்த என்னை பாலா தான் பரதேசியில் பக்காவாக மாற்றிக்காட்டினார். அந்த படம் எனது திறமைக்கு வெளிச்சம் போட்டது. அந்த வகையில், இந்த சண்டிவீரன் என்னை முழுக்க முழுக்க வித்தியாசப்படுத்தி காண்பித்திருக்கிறது. கிராமப்புறங்களில் லுங்கியைக்கட்டிக்கொண்டு தோளில் டவலை போட்டபடி புழுதி பறக்க பறக்க இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.
இது என்னைப்பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தையும், எனது இனனொரு முகத்தையும் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஆக, பாலாவின் தயாரிப்பில் பரதேசி என்னை வித்தியாசப்படுத்தியது போன்று இப்போது அவர் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் நடித்துள்ள இந்த சண்டி வீரனும் என்னை இன்னொரு கோணத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறது என்று கூறி வரும் அதர்வா, இதற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் என்னை ஏமாற்றியபோதும்,. இந்த படம் என்னை கண்டிப்பாக ஏமாற்றாது என்றும அடித்து சொல்லி வருகிறார்.