இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
அனுஷ்கா நடித்து இன்னும் சில நாட்களில் தமிழில் 'என்னை அறிந்தால்' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வேறு எந்த புதுப் படமும் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை. ஏனென்றால், அனுஷ்காவிற்கு தற்போது எந்தப் புதுப்படங்களும் ஒப்பந்தமாகவில்லை.
இந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்காவிற்குத் திருமணம் நடந்தாலும் நடக்கலாம் என வழக்கம் போல அவரைப் பற்றிய வதந்தி ஏற்கெனவே பரவ ஆரம்பித்துவிட்டது. அவருடைய பெற்றோர்கள் இந்த ஆண்டு கண்டிப்பாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் என வதந்திக்கு அவரது குடும்பத்தாரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
'அருந்ததி' படம்தான் அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே அளவிற்கு 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களும் பெற்றுத் தரும் என்கிறார்கள். அதனால், அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடித்ததே சாதனைதான். அதனால், காலாகாலத்தில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் என டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.