'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி நடிக்கும் பொங்கி எழு மனோகரா படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகிறது. சில படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கும் இர்பானுக்கு இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி கூறியதாவது:
ஒரு பால்கார இளைஞனுக்கு வரும் இரண்டு காதல்கள்தான் கதை. பால்காரனாக இர்பான் நடிக்கிறார், அவரது காதலிகளாக அர்ச்சனாவும், அருந்ததி நாயரும் நடிக்கிறார்கள். 1990களில் நடக்கும் கதை. இதனால் அந்த சாயலில் உள்ள ஒரு கிராமத்தை தேடிச் சென்று படமாக்கி இருக்கிறோம்.
படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் இர்பானை மாடுகளிடம் பால் கறக்கச் சொல்லி பயற்சி கொடுத்தோம். நிஜத்தில் பணக்காரவீட்டு பையனான இர்பான் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார். அப்படி இருந்தும் படப்பிடிப்பில் பால்கறக்கும் காட்சியில் மாட்டிடம் நிறைய உதை வாங்கியிருக்கிறார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் ரமேஷ் ரங்கசாமி.