போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஜி.வி.பிரகாஷ்குமாரும், கயல் ஆனந்தியும் நடக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் படப்பிடிப்புகள் கிருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பெரிய மாவு மில்லில் தொடங்கியது. மாவு மில்லில் வேலை செய்யும் சாதாரண பெண்ணாக ஆனந்தி, குட்டைப் பாவடை சட்டையுடன் நடித்தார். அவரைத் தேடி வரும் இளைஞனாக ஜி.வி.பிரகாஷ் நடித்தார்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற பெயரை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் படப்பிடிப்புக்கு த்ரிஷாவும், நயன்தாராவும் வந்திருப்பாக கருதி நூற்றுக் கணக்கில் கூடி விட்டனர். அதன் பிறகுதான் வந்திருப்பது அவர்கள் இல்லை. ஜி.வி.பிரகாசும், ஆனந்தியும் என்று அறிந்தவுடன், சிறிது நேரம் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பினர்.
"தொடர்ந்து பத்து நாள் இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. ஒரு நடுத்தர இளைஞனுக்கு வரும் காதலும், அதனால் வரும் பிரச்னைகளும், அந்த பிரச்னைளை சாதுரியமாக ஹீரோ எப்படி கடந்து வருகிறார் என்பதும்தான் கதை. எல்லா பிரச்னைகளுக்குமே எளிதான ஒரு தீர்வு இருக்கிறது. அதை கண்டுபிடிக்காமல் மோதுவதால்தான் பிரச்னை பெரிதாகிறது என்பதை லாஜிக்காக சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.