‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பொதுவாக தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களுக்கு நடிக்க வந்த இருபது வருடங்கள் கழித்து வரும் ஆசை தான் ஒரு படத்தை டைரக்ட் செய்யவேண்டும் என்பது.. கமல். விஜயகாந்த், ஆகியோர் படம் இயக்கியதும் அப்படித்தான். ஆனால் வருடத்தில் ஆறு படங்களாவது நடித்துவிடும் மலையாள ஹீரோக்களுக்கு இப்படி ஒரு எண்ணம் துளியும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் மலையாள இளம் முன்னணி நடிகரான பிருத்விராஜுக்கு இப்போது இயக்குனராகும் ஆசை வந்துள்ளது..
சினிமாவில் நுழைந்த இந்த பத்து வருடங்களில் கதாநாயகன், வில்லன் என தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்த பிருத்விராஜ் 'உருமி' படம் மூலமாக தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது 'டபுள் பேரல்' என்கிற படத்தையும் தயாரித்து அதில் ஒரு ஹீரோவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் உதித்துள்ளதாம். இதுபற்றிய அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.