போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
'லிங்கா' படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் உருவான பிரச்னை அடுத்து வேறு திசையை நோக்கி பயணிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் 'லிங்கா' படத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பிரச்னை திட்டமிட்ட அரசியல் செய்தி என்று ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
படத்திற்காக திரையரங்கு உரிமையாளர்களிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அவர்களுக்குத் தர வேண்டிய அட்வான்ஸ் தொகையை படத்தை தமிழ்நாடு வினியோக உரிமையை வாங்கிய வேந்தர் மூவீஸ் தற்போதைக்கு தர முடியாது என்றும் சொல்லி வருவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, கடந்த சில நாட்களாக சிங்காரவேலன் தரப்பினர் பிரச்னையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனராம். அதன் படி சில அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். அவர்கள் 'லிங்கா' படத்தின் மொத்த வியாபார விவரத்தையும் கேட்டிருக்கிறார்களாம். அதைக் கொடுத்த பின்னர் சில அரசியல் தலைவர்கள் 'லிங்கா' பிரச்சனைக்காக குரல் கொடுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே, வினியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்த போது அரசியல் கட்சித் தலைவர்களான சீமான், வேல் முருகன் ஆகியோரும் கலந்து கொண்டு அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில், 'லிங்கா' பிரச்சனை குறித்து பாதிக்கப்பட்ட அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் நடைபெற உள்ளதாம். அதில், இறுதி முடிவு எட்டப்படும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.