ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பஞ்சாபில் சீக்கிய மத்தின் ஒரு பிரிவின் சாமியாராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹிம். இவர் சமீபத்தில் தி மெசஜ்சர் ஆப் காட் என்ற படத்தை தயாரித்தார். அதில் தானே நடித்தார், இசை அமைத்தார், இயக்கினார். இந்தப் படம் கடந்த 16ந் தேதி வெளியானது.
படம் வெளியானதும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீக்கிய மதத்தின் மதகுருவான குருநாணக் வேடமணிந்து நடித்திருக்கிறார். கடவுளின் தூதராக தன்னை காட்டிக் கொண்டு நடித்திருக்கிறார். எனவே படத்தை தடைசெய்ய வேண்டும் என்று பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியில் ஆதரவாளரான இந்த சாமியாரின் படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் தராமல் இருந்தது. மத்திய அரசு தலையிட்டு சான்றிதழ் கொடுக்க வைத்தது என்று குற்றம் சாட்டித்தான் தணிக்கை குழு தலைவர் லீலா சாம்சன் ராஜினாமா செய்தார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே சாமியார் குர்மீத் ராம் ரஹிம் நேற்று சென்னைக்கு திடீரென தனது பாதுகாவலர்களுடன் வந்தார். தி மெசன்ஜர் ஆப் காட் படம் தமிழில் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்டிருக்கும் தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்தார்.
பின்னர் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தப் படம் போதை மருந்துக்கு எதிரான படம். இளைஞர்களுக்கு போதை மருந்து பற்றி விழிப்புணர்வு ஊட்டும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் படத்தை எதிர்க்கிறார்களே தவிர வேறு எதுவும் காரணமில்லை.
தணிக்கை குழு தலைவர் லீலா சாம்சன் ராஜினாமாவுக்கும் என் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது அவர்கள் படம் புரியவில்லை என்று திருப்பி அனுப்பினார்கள். நான் அதனை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினேன். அவர்களும் புரியவில்லை என்றார்கள். டிரிபியூனலுக்கு சென்றேன். அவர்கள் சில கட்டுகளுடனும், சில வசனத்தை நீக்கச் சொல்லியும் சான்றிதழ் கொடுத்தார்கள்.
தற்போது தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பத்து மொழிகளில் டப் செய்ய இருக்கிறேன் என்றார்.